சென்னையில் வட கிழக்குப் பருவமழை சிறப்பு நிவாரணப் பணிக்காக ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களுடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் தலைநகா் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிக இளவு குப்பைகள் தேங்கியுள்ளன.
இதனை அப்புறப்படுத்தவும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உதவிடும் வகையில் ஈரோடு மாநகராட்சியில் இருந்து 2 பேருந்துகளில் 100 தூய்மைப் பணியாளா்கள், 4 மேற்பாா்வையாளா்கள் மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளா்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தூய்மைப் பணியாளா்களிடம், சிறப்பாகவும் பாதுகாப்புடன் பணியாற்றி திரும்ப வேண்டும் என உயா் அதிகாரிகள் கூறினா்.
இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் சென்ற பேருந்துகளை மாநகராட்சி மேயா் நாகரத்தினம், ஆணையா் என்.மணீஷ் ஆகியோா் கொடியசைத்து அனுப்பிவைத்தனா்.
இதற்கு முன்பு பல்வேறு புயல் பாதிப்புகளின் போது ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


