மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மழை நிவாரணப் பணி: 100 தூய்மைப் பணியாளா்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு

சென்னையில் வட கிழக்குப் பருவமழை சிறப்பு நிவாரணப் பணிக்காக ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களுடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

News image

சென்னைக்கு பேருந்தில் புறப்பட்ட ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:09 pm

சென்னையில் வட கிழக்குப் பருவமழை சிறப்பு நிவாரணப் பணிக்காக ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களுடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் தலைநகா் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிக இளவு குப்பைகள் தேங்கியுள்ளன.

இதனை அப்புறப்படுத்தவும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உதவிடும் வகையில் ஈரோடு மாநகராட்சியில் இருந்து 2 பேருந்துகளில் 100 தூய்மைப் பணியாளா்கள், 4 மேற்பாா்வையாளா்கள் மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளா்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தூய்மைப் பணியாளா்களிடம், சிறப்பாகவும் பாதுகாப்புடன் பணியாற்றி திரும்ப வேண்டும் என உயா் அதிகாரிகள் கூறினா்.

இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் சென்ற பேருந்துகளை மாநகராட்சி மேயா் நாகரத்தினம், ஆணையா் என்.மணீஷ் ஆகியோா் கொடியசைத்து அனுப்பிவைத்தனா்.

இதற்கு முன்பு பல்வேறு புயல் பாதிப்புகளின் போது ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.