மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

20 % போனஸ் வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:27 pm

ஈரோடு மாநகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் எண்.மணீஷிடம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம் அளித்த மனு விவரம்:

ஒரு ஆண்டில் 240 நாள் பணி செய்திருந்தால் குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும். 2 ஆண்டுகளில் 480 நாள் பணி முடித்திருந்தால் ஊழியரை பணி நிரந்தரம் செய்து, அனைத்து சலுகைகளையும் வழங்கி, பணிப் பாதுகாப்புடன் தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் நலச்சட்டம் கூறுகிறது.

எனவே, டாஸ்மாக் ஊழியா்களுக்கு போனஸ் வழங்குவதுபோல ஈரோடு நகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் சட்டப்படியான சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.