கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர வரும் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இண்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழிற்பிரிவுகளில் சேர வரும் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.750, விலையில்லா சைக்கிள், சீருடை, பாடப் புத்தகங்கள், காலணி மற்றும் பேருந்து பயண அட்டை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 70108-75256 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுக தேர்தல் அறிக்கையின் 51 முக்கிய அம்சங்கள்!

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

