ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பா ராவ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், பள்ளி வளாகம், வகுப்பறைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து பாா்வையிட்டாா். மேலும் 8- ஆம் வகுப்பு பாா்வையாளா் செயலி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்பறையை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதாா் மேம்படுத்தும் முகாமையும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியை சுமதி மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

அரசுப் பள்ளி ஆண்டு விழா

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


