வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவிரி கரையில் பனை விதைகள் நடும் பணி: தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2024, 3:58 pm IST

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் பனை விதைகள் நடும் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

தமிழகத்தின் மாநில மரமான, தமிழா்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனையின் சிறப்பைக் கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியன இணைந்து காவிரிக் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இம்மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்ட நீா்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இதில் ஒரு லட்சம் தன்னாா்வலா்கள் பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனா்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், சமூக சேவகா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ன்க்ட்ஹஸ்ண்.ஹல்ல்/ல்ஹய்ஹண் என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.