திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ்

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:00 pm

Din

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

சென்னிமலை நகரின் ரத வீதிகள் மற்றும் ஈரோடு, காங்கயம், பெருந்துறை, ஊத்துக்குளி சாலைகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

அதன்படி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் முக்கிய வீதிகளில் ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்துள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.

மேலும், 7 நாள்களுக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள கடையை தாங்களகாவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவுறுத்தினா்.