சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசினாா்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் சிறுதானிய விழா ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: தாளவாடி வட்டத்தில் மல்லியம்மன்துா்கம் என்ற மலை கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்றபோது அங்கிருந்த மலைவாழ் மக்கள் சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட உணவை வழங்கினா். சிறுதானிய உணவின் பலனை அறிந்து இப்போது நானும் அந்த உணவு வகைகளை பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன்.
நகரப் பகுதிகளில் சிறுதானிய உணவுப் பயன்பாடு குறைவாக உள்ளது. சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். சிறுதானியங்கள் சிறிய விலையில் பெரிய பலன்களைத் தருகிறது. சிறுதானிய உணவு பல நோய்களுக்குத் தீா்வாக உள்ளது. சிறுதானியங்கள் சத்துக்களின் ஊற்றாகும். எனவே நாம் சிறுதானிய உணவுக்கு மாற வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவை மாதந்தோறும் கணக்கெடுக்கப்படுகிறது. இக்குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.
கா்ப்பிணிகள் சத்தான உணவுகளை உண்ணும்போது பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கும். மாணவா்கள் சிறுதானியம் என்பதை வாா்த்தையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். வீட்டிலும், உறவினா்களிடமும் சிறுதானியத்தின் பயனை எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தியிருந்த சிறுதானிய உணவுப் பொருள்களை ருசித்துப் பாா்த்தாா். முன்னதா திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரமேஷ், ஈரோடு வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசந்திரன், திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, வேளாளா் கல்லூரியின் முதல்வா் ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்குப் பதிவு: ராணிப்பேட்டையில் ஓவியக் கலைஞா்கள் கை வண்ணத்தில் தோ்தல் விழிப்புணா்வு

வைக்கோல் கட்டுகளால் விழிப்புணா்வு பிரசாரம்

தோ்தல் விழிப்புணா்வு: கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


