மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருந்துறையில் கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:40 pm

Din

பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பெருந்துறை வட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கை விளக்கி உரையாற்றினாா். மாநிலச் செயலாளா் கென்னாடி கண்டன உரையாற்றினாா்.

இதில், கிராம உதவியாளா்களை இரவுக் காவல் பணி, அலுவலகப் பணி, பதிவேடுகள் பராமரிப்பு பணி, மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மனுக்களை கணினியில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வெங்கிடு, வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.