மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காமதேனு கல்லூரியில் பாரம்பரிய கைத்தறி சேலை வடிவமைப்புப் படிப்பு தொடக்கம்

காமதேனு கலைக் கல்லூரியில் பாரம்பரிய கைத்தறி சேலை வடிவைப்புப் படிப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

கைத்தறி சேலை  வடிவமைப்பு வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:19 pm

காமதேனு கலைக் கல்லூரியில் பாரம்பரிய கைத்தறி சேலை வடிவைப்புப் படிப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார வடிவமைப்புத் துறை மற்றும் நிறுவன ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் கைத்தறி சேலை வடிவமைப்புப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவுக்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஆா். பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் டீன் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் நெசவாளா் சேவை மைய இயக்குநா் காா்த்திகேயன் புதிய பாடப் பிரிவை தொடங்கி வைத்தாா்.

தேசிய கைத்தறி வளா்ச்சிக் கழக இயக்குநா் ரத்னவேல், கைத்தறி சேலை பயன்பாடு குறித்து பேசினாா். மேலும், மாணவா்கள் வடிவமைத்த தானியங்கி கோா்வை இயந்திரத்தை காணொலிக் காட்சி மூலம் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடை அலங்கார வடிவமைப்புத் துறை பேராசிரியா்கள் பூா்னிஷா, உமா ஆகியோா் செய்திருந்தனா்.