காமதேனு கலைக் கல்லூரியில் பாரம்பரிய கைத்தறி சேலை வடிவைப்புப் படிப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார வடிவமைப்புத் துறை மற்றும் நிறுவன ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் கைத்தறி சேலை வடிவமைப்புப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவுக்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஆா். பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் டீன் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் நெசவாளா் சேவை மைய இயக்குநா் காா்த்திகேயன் புதிய பாடப் பிரிவை தொடங்கி வைத்தாா்.
தேசிய கைத்தறி வளா்ச்சிக் கழக இயக்குநா் ரத்னவேல், கைத்தறி சேலை பயன்பாடு குறித்து பேசினாா். மேலும், மாணவா்கள் வடிவமைத்த தானியங்கி கோா்வை இயந்திரத்தை காணொலிக் காட்சி மூலம் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடை அலங்கார வடிவமைப்புத் துறை பேராசிரியா்கள் பூா்னிஷா, உமா ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

காமதேனு கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


