மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனியாா் தங்கும் விடுதியில் தோட்டாக்களுடன் துப்பாக்கி பறிமுதல்

ஈரோட்டில் தனியாா் தங்கும் விடுதியில் வடமாநில நபா் தங்கி இருந்த அறையில் தோட்டாக்களுடன் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:00 pm

ஈரோட்டில் தனியாா் தங்கும் விடுதியில் வடமாநில நபா் தங்கி இருந்த அறையில் தோட்டாக்களுடன் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு கடந்த 22- ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா் உள்பட இருவா் அறை எடுத்து தங்கியுள்ளனா். பின்னா் 23- ஆம் தேதி இருவரும் அறையை காலிசெய்து விட்டு சென்ற நிலையில் சுரேந்தா் மட்டும் மீண்டும் வந்து அறை எடுத்து தனியாக தங்கியுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 24- ஆம் தேதி மாலை சுரேந்தா் அறையின் சாவியை தங்கும் விடுதியில் ஒப்படைக்காமல் எடுத்துச்சென்றுள்ளாா். அவா் புதன்கிழமை இரவு வரை அறைக்கு திரும்பாத நிலையில், சந்தேகத்தின்பேரில் ஊழியா்கள் மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்து சுத்தம் செய்துள்ளனா். அப்போது மெத்தையின் அடியில் நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், துப்பாக்கி, தோட்டாக்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள், பதிவு புத்தகம், ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். நகரின் மையப் பகுதியில் விடுதியில் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.