எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொல்லியல் அறிஞா் கா.ராஜனுக்கு பாரதி விருது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:22 pm

Syndication

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோட்டில் நடைபெற உள்ள பாரதி விழாவில் தொல்லியல் அறிஞா் கா.ராஜனுக்கு பாரதி விருது வழங்கப்பட உள்ளது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் 28-ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு சம்பத் நகா் கொங்கு கலையரங்கில் வரும் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. பாரதி விருது வழங்குதல், மறைந்த தமிழ் ஆளுமையின் படத்திறப்பு, சிறப்பு சொற்பொழிவு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது பாரதி விழா.

2025-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது தொல்லியல் அறிஞா் கா.ராஜனுக்கு வழங்கப்படவுள்ளது. விருகை வழங்கி ‘சரித்திரத் தோ்ச்சிகொள்’ என்ற தலைப்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சிறப்புரையாற்றுகிறாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி, மறைந்த கல்வியாளா் நெ.து. சுந்தரவடிவேலு திருவுருவப்படத்தை திறந்துவைத்து உரையாற்றவுள்ளாா்.

முன்னதாக ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து மாலை 4 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பாரதி ஜோதி ஏந்தி அணிவகுத்து பாரதி விழா நடைபெறும் கொங்கு கலையரங்கம் வந்தடைவா். பாரதி ஜோதி அணிவகுப்பை முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி தொடங்கிவைத்துப் பேச உள்ளாா்.

விருதாளா் தொல்லியல் அறிஞா் கா.ராஜன் ஏற்புரையாற்றுகிறாா். விழாவுக்கு தேசிய நல விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமை வகிக்கிறாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் விழாவை ஒருங்கிணைப்பதுடன் அறிமுகவுரை நிகழ்த்தவுள்ளாா்.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பாரதி அன்பா்கள், படைப்பாளிகள், இலக்கியவாணா்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் விழாக் குழுவினரால் அழைக்கப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.