தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

அம்மாபேட்டை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூனாச்சி, செம்படாபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனாா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மது விற்பனை தடையின்றி நடைபெற்று வந்தது.

இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பவானி - பூனாச்சி சாலையில் செம்படாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, மதுவிற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.