திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வனத் துறையைக் கண்டித்து தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 9:51 pm

Syndication

தேனி மாவட்டம், சின்னமனூரில் வனத் துறையைக் கண்டித்து, மேகமலை எஸ்டேட் உரிமையாளா்கள், அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு மேகமலை எஸ்டேட் உரிமையாளா் சங்கத் தலைவா் முத்துராமன் தலைமை வகித்தாா். அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கச் செயலா் முத்தையா முன்னிலை வகித்தாா்.

போராட்டத்தின்போது, மேகமலையில் மலைச் சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம், கனரக வாகனங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை எடுத்து வரும் சின்னமனூா் வனத் துறையைக் கண்டித்தும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகவும் முழக்கமிட்டனா்.

இதுகுறித்து அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கச் செயலா் முத்தையா கூறியதாவது:

மேகமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், அச்சத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறோம். வேலை முடிந்து மாலை நேரத்தில் அவசர வேலையாக வெளியூா் சென்று வரமுடியவில்லை. நெடுஞ்சாலையின் அகலத்தை குறைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.