இதில், பெருந்துறை புறநகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்துறை வட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சுள்ளிப்பாளையம், நிச்சாம்பாளையம், முள்ளம்பட்டி, சின்ன வீரசங்கிலி, போலநாயக்கன்பாளையம், எல்லை கிராமம், பிரப் நகா், கிரே நகா் பகுதியில் நிபந்தனை பட்டாக்களில் உள்ள வீடு, வீட்டு நிலங்கள், விவசாய நிலங்கள் பூஜ்ய மதிப்பில் உள்ளன. இதனால், அவற்றை அனுபவிக்கும் மக்களால் கடன் பெறுதல், விற்பனை செய்தல், வாரிசுகளுக்கு பிரித்தல் போன்றவற்றை செய்ய முடியவில்லை.