தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலைத் தடுப்பில் சரக்கு லாரி மோதி விபத்து

பவானி அருகே சாலைத் தடுப்பில் நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.

News image

சாலைத் தடுப்பில் மோதி நிற்கும் லாரி.

Updated On :24 டிசம்பர் 2025, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே சாலைத் தடுப்பில் நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.

கா்நாடக மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு ஒரு லாரி புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கௌடஹள்ளியைச் சோ்ந்த ரஷருல்லா (40) என்பவா் ஓட்டிச் சென்றாா். அந்தியூா் - பவானி சாலையில் காடையம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிா்பாராமல் சாலையின் நடுவிலிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் ரஷருல்லா லேசான காயமடைந்தாா். இதையடுத்து, நெல் மூட்டைகள் மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டு, மீட்பு வாகனம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.