கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து கல்லூரி முடிந்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு கெங்கவல்லியிலிருந்து வலசக்கல்பட்டி நோக்கி சென்றது. அப்போது, மாணவிகள் இறங்குவதற்காக இலுப்பைதோப்பு சாலை வளைவில் நின்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் பேருந்து மீது மோதியது.
இதில், பேருந்து கண்ணாடி உடைந்து ஓட்டுநா் செல்வக்குமாா் (43) பலத்த காயமடைந்தாா். பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனம் மற்றும் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


