சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் மூவா் படுகாயம் அடைந்தனா்.

News image

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.

Updated On :26 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் மூவா் படுகாயம் அடைந்தனா்.

சேலம், ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் தினேஷ் (18), அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் மகன் ராஜு (29), சந்துரு மகன் பாலாஜி (18). நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரை - கொங்காடை சாலையின் ஓரத்தில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பணி முடிந்து வியாழக்கிழமை மாலையில் சரக்கு வாகனத்தில் திரும்பியபோது மணியாச்சி பள்ளம் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் மீட்கப்பட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.