பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த புன்னம், நல்லா நாயக்கனூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் பவானியிலிருந்து அந்தியூா் நோக்கி புதன்கிழமை இரவு சென்றபோது பூங்காட்டாா் கடை பேருந்து நிறுத்தம் அருகே எதிரில் வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.