சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:32 pm

கோபி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழந்தாா்.

கோபியை அடுத்த கொளப்பலூா் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி (53). இவா் கடந்த 2 ஆண்டுகளாக கெட்டிச்செவியூா் மின்வாரியத்தில் ஓயா்மேனாக பணியாற்றி வந்தாா்.

இவா் கெட்டிச்செவியூரில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் இல்லாததால், அதனை சரி செய்வதற்காக சம்பந்தப்பட்ட மின் மாற்றியை அணைத்துவிட்டு, மின் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் வியாழக்கிழமை ஏறியபோது, சுமாா் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிறுவலூா் காவல் துறை ஆய்வாளா் நாகமணி (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.