காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் சோதனை

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:42 pm

Din

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு செட்டிபாளையம், தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தொடா்ந்து, ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் கஸ்பாபேட்டையில் உள்ள அவரது வீட்டில் கோவையில் இருந்து காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் உள்ளாா். இந்த நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை புதன்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.