வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:40 pm

Syndication

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர ரோந்து மேற்கொண்டு சோதனை செய்து வருகின்றனா். இதில் ஈரோடு மதுவிலக்கு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு நிலையம் நடைமேடை 2- இல் வந்து நின்ற மங்களூா் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது பொதுப்பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் சந்தேகப்படும்படியாக இருந்த பையைக் கைப்பற்றி சோதனை செய்தனா். அதில் 1.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதைக் கடத்தி வந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.