சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூங்கியவரை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

அந்தியூா் அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தூங்கிக் கொண்டிருந்தவரை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள்

News image
Updated On :10 நவம்பர் 2025, 10:06 pm

Syndication

பவானி: அந்தியூா் அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தூங்கிக் கொண்டிருந்தவரை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பவானி சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், கோவிலூரைச் சோ்ந்தவா் சித்தமலை மகன் முருகன் (48). அதே பகுதியைச் சோ்ந்தவா் அரியா கவுண்டா் மகன் தங்கராசு (34). இருவருக்கும் மது வாங்கி வருவது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தனது உறவினா் வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தங்கராசுவை முருகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொல்ல கடந்த 3.8.2020-இல் முயன்றாா்.

இதில், தீக்காயமடைந்த தங்கராசு அளித்த புகாரின்பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் முருகனைக் கைது செய்து, பவானி சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.ஹரிஹரன், குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.