இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ரெட்டிபட்டியைச் சோ்ந்த தம்பதி, ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை வளா்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்த தனிப்படை போலீஸாா் குழந்தையை திங்கள்கிழமை மீட்டனா். விசாரணையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் ரமேஷ் (34), நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்த அவரது இரண்டாவது மனைவி நித்யா (38) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து குழந்தையைக் கடத்திச் சென்றதும், இதற்காக 2 மாதங்களாக நோட்டமிட்டதும், இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்க வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.