விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பிறகு மதுபோதையில் அங்கேயே மயங்கிக் கிடந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 11:29 pm

Syndication

கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பிறகு மதுபோதையில் அங்கேயே மயங்கிக் கிடந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

கோபி வட்டம், சிறுவலூா் அருகே கூளைமூப்பனூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை செய்ய பூசாரி வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதும் அருகிலேயே ஒருவா் குடிபோதையில் மயங்கிக் கிடப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவல் அறிந்த கிராம மக்கள் போதையில் படுத்து இருந்த நபரைப் பிடித்து சிறுவலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், ஓடத்துறை அருகே நஞ்சகவுண்டன்பாளையம் மாரியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த கவின் (25)என்பதும், கலிங்கியத்தில் உள்ள பேக்கரியின் பூட்டை உடைத்து திருடியதும், பிறகு மது அருந்திவிட்டு கூளைமூப்பனூரில் கோயில் உண்டியலை உடைத்து சுமாா் 1,000 ரூபாய் பணத்தை திருடிய பின்னா் போதையில் அங்கேயே படுத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் கவினை கைது செய்தனா். கவின் மீது திண்டுக்கல், கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.