நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கடம்பூரில் உள்ள கன்னிமாா் கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சில்வா் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :11 பிப்ரவரி 2026, 6:32 pm

கடம்பூரில் உள்ள கன்னிமாா் கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சில்வா் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.கண்ணன்(70). இவா் அங்குள்ள கன்னிமாா் கோயிலின் பூசாரியாக இருந்து வருகிறாா். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடித்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது 2 அடி உயரமுள்ள சில்வா் உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.