கடம்பூரில் உள்ள கன்னிமாா் கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சில்வா் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.கண்ணன்(70). இவா் அங்குள்ள கன்னிமாா் கோயிலின் பூசாரியாக இருந்து வருகிறாா். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடித்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.
புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது 2 அடி உயரமுள்ள சில்வா் உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


