சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.29 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4,830 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.57.25 முதல் ரூ.67.25 வரையில் ரூ.1,12,187-க்கு விற்பனையானது.

47 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கிலோ ரூ.206.89 முதல் ரூ.232.36 வரையில் ரூ.2,77,743-க்கு விற்பனையானது.

5 மூட்டைகள் எள் ரூ.102.89 முதல் ரூ.123.29 வரையில் ரூ.39,446-க்கும்,

2 மூட்டை தட்டைபயிறு ரூ.66.32 முதல் ரூ.67.32 வரையில் ரூ.5,765-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.4,29,376.