அந்தியூரில் ரூ.19.31 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.31 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.
Published on

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.31 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.

இங்கு 6,074 தேங்காய்கள் கிலோ ரூ.45.50 முதல் ரூ.55.30 வரை ரூ.1,19.607-க்கும், 36 மூட்டைகள் தேங்காய் பருப்பு ரூ.174.89 முதல் ரூ.206.46 வரை ரூ.1,95,628-க்கும், 4 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ.81.19 முதல் ரூ.83.09 வரை ரூ.25,792-க்கும் விற்பனையாகின.

மேலும், 400 மூட்டைகள் துவரை கிலோ ரூ.85.61 முதல் ரூ.95.61 வரை ரூ.15,33,250-க்கும், 3 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ.70.69 முதல் ரூ.82.09 வரை ரூ.8,742-க்கும் ஏலம் போனது. 3 மூட்டைகள் அவரை கிலோ ரூ.60.89 முதல் ரூ.66.69 வரை ரூ.24,726-க்கும், ஒரு மூட்டை கொள்ளு கிலோ ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.2,742-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19,31,530-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com