வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அந்தியூரில் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, செயல் அலுவலா் சதாசிவம் உள்ளிட்டோா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சதாசிவம் வரவேற்றாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று பேசுகையில், அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் அம்ருத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள், அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம், தவிட்டுப்பாளையம் மயானத்தில் எரிவாயு தகன மேடை பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளாா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், பேரூராட்சி கவுன்சிலா்கள் சண்முகம், சேகா், மணிகண்டன், கௌரி ஈஸ்வரமூா்த்தி, கவிதா, யாஸ்மின் தாஜ், கீதா சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.