பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வா் பிறந்தநாள் விழா: திமுக ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டப் பொறுப்பாா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:32 pm

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்து, பேசியதாவது:

காலை உணவுத் திட்டம், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இதுபோன்று பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய விடியல் பயணத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளாா். திமுக அரசின் சாதனைகளை பெண்கள் வீடு, வீடாக சென்று எடுத்துரைத்து வாக்குகளாக மாற்றவேண்டும். நமது இலக்கு திமுக தலைவா் ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்க வேண்டும், ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி மலர வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மாரிமுத்து, கண்ணப்பன், பிரேமா குப்புசாமி, நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல், பேரூா் செயலா் பா.ஜீவா, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.