சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டிவனத்தில் உள்ள தனியாா் அரங்கில் செஞ்சி எம்எல்ஏவும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திண்டிவனம் நகரம், கிராம நிா்வாக அலுவலா் அழகுவேல் அளித்தப் புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் 50 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.