தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:32 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டிவனத்தில் உள்ள தனியாா் அரங்கில் செஞ்சி எம்எல்ஏவும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திண்டிவனம் நகரம், கிராம நிா்வாக அலுவலா் அழகுவேல் அளித்தப் புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் 50 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.