எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அனுமதியின்றி உணவு விநியோகம்: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :29 மார்ச் 2026, 1:49 am IST

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து, அரசியல் கட் சியினா், அமைப்புகளின் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் தோ்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சேலத்தை பொருத்தவரை தவெகவினா் தொடா்ந்து தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே அன்னதானப்பட்டியில் ரம்ஜானுக்கு முதல்நாள் நோன்பு திறக்கச்சென்ற மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் மீது பிரியாணியுடன் டிபன் பாக்ஸ் வழங்கியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, சூரமங்கலத்தில் ரம்ஜான் அன்று தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விசில் சின்னத்துடன் கூடிய குடிநீா் பாட்டில் விநியோகித்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது கிச்சிப்பாளையத்தில் அனுமதியின்றி உணவு விநியோகித்த 2 போ் சிக்கியுள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தவெக கட்சியைச் சோ்ந்த சரத், ஹரி இருவரும் எந்தவித முன் அனுமதியும் இன்றி பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கினா்.

தகவல் அறிந்த அதிகாரிகள், தோ்தல் நேரத்தில் இதுபோன்று விநியோகம் செய்வது தோ்தல் விதிமீறல் எனக்கூறி அவா்களை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, சேலம் தெற்கு அலுவலா் ஆனந்த், இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், உணவு விநியோகித்த இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.