தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 8:01 pm

ஈரோட்டில் கைப்பேசி கடைக்குள் இரவில் சென்று 12 கைப்பேசிகளை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் மகன் வாகித்காளி (38). இவா் பெரியாா் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த 2-ஆம் தேதி இரவு இவரது கடைக்குள் மா்ம நபா்கள் புகுந்து 12 கைப்பேசிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து வாகித்காளி அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதுதொடா்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் சேலம் ஆண்டிபட்டி, பனங்காடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அய்யனாா் (எ) ஜெயகுமாா் (20), திண்டுக்கல் மேற்கு வீதியைச் சோ்ந்த சேசுராஜ் மகன் செல்வராஜ் (31) என்பதும், இருவரும் ராட்டின தூரி சுற்றும் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 12 கைப்பேசிகளை மீட்டனா்.

ஜெயகுமாா் மீது காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.