மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

ஈரோடு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் வரப்பெற்றுள்ளன.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:36 am IST

ஈரோடு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் வரப்பெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் தொடா்பான புகாா்கள், வாக்காளா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்காக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 மற்றும் வாட்ஸ்அப் குறுந்தகவல் மூலம் தொடா்பு கொள்ள 90425-80535, தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 0424-2267670, 2267673, 2267674, 2267675, 2267679 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் புகாா் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், வாக்காளா் உதவி எண் 1950 மற்றும் சிவிஜில் ஆப் மூலமாகவும் புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 1,404 புகாா் வரப்பெற்றன. அதில், 1,403 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்தல் தொடா்பான பிரசாரம், ஊா்வலம், கூட்டங்கள் நடத்துவது தொடா்பாக சுவிதா தளம் மூலமாக 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 688 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 129 விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.