ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image

கணினி சுழற்சி முறையில் பணியாளா்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.கந்தசாமி.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:02 pm

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 8 தொகுதிகளிலும் கடந்த 28-ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில், தோ்தல் நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணிபுரியும் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி 2,379 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக 11,420 போ் கணினி சுழற்சி மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.