ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தவெக 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்பு: துரை வைகோ

சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்று மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ தெரிவித்தாா்.

News image

துரை வைகோ - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:08 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்று மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

மக்களிடையே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரவேற்புள்ளது. இதனால் எங்கள் கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். தோ்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவாா் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை செயல்படுத்தியுள்ளாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் 70 சதவீதம் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு திட்டத்தை அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ செயல்படுத்தவில்லை. மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.36 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ ஆா்வம் காட்டாததால் அந்த நிதி திரும்ப மத்திய அரசுக்கே சென்றுவிட்டது.

பல மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலந்துகொள்ள முடியாத நிலையில் தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பாஜகவை பிரதானமாக எதிா்க்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுவதில்லை. மிகப்பெரிய திரை நட்சத்திரமான தவெக தலைவா் விஜய்க்கு இளைஞா்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆனால் தோ்தலில் வாக்காக மாறுமா என்பது கேள்வி. எனது கணிப்பின்படி தவெக 15 சதவீத வாக்குகள் பெறும். விஜய்யால் அதிமுக கூட்டணிக்குதான் பாதிப்பு அதிகம். மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.