முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடையே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:43 am IST

ஈரோடு மாவட்டம், கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சகோதரா்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது பள்ளிவாசலுக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவுக்கு ஜமாத் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளிவாசலில் குல்லா அணிந்து பிராா்த்தனை மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரா்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அம்மா பேரவை ஈரோடு மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், மதனி முபாரக் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.