லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சி இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த வேட்பாளா் செந்தில்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:40 pm

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவாரங்குப்பம், மல்லகுண்டா மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஜாப்ராபாத், நடுப்பட்டறை, ஈச்சங்கால், தேவஸ்தானம், நகராட்சிப் பகுதிகளில் புதூா், சென்னாம்பேட்டை, நேதாஜி நகா் உள்பட பல பகுதிகளில் வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து அதிமுக தோ்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வேட்பாளா் செந்தில்குமாா் பேசுகையில், ஊராட்சிகளில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மின் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள், தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி திட்டங்கள் கொண்டு வர பாடுபடுவேன் என்றாா்.

ஞாயிற்றுக்கிழை காலை உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயத்தில் திருப்பலி வழிபாட்டில் கலந்துகொள்ள வந்த கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். மேலும், ஆலய பங்குத்தந்தை அந்தோணிமாறன் மற்றும் பங்குமேய்ப்பு குழுவினரை சந்தித்து ஆதரவு திரட்டினாா். உதயேந்திரம் பேரூா் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.