பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது சந்தித்து கொண்ட அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:55 am IST

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ, திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சாா்பாக சையத்பாரூக் போட்டியிடுகின்றனா். இவா்களுடன் தவெக, நாம்தமிழா் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து வந்த கிறிஸ்தவா்களிடம் ஓரே நேரத்தில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக், தவெக பேரூா் செயலாளா் தங்கமணி மற்றும் நாம் தமிழா் கட்சியினா் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

ஓரே நேரத்தில் 4 கட்சிகளை சோ்ந்தவகளும் ஓரே இடத்தில் கூடி வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத் பாரூக்கை கடந்து சென்ற போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்தினா்.

அப்போது நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ் ஆகியோரிடமும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வாழ்த்தி பேசினாா்.