அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது சந்தித்து கொண்ட அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:25 pm

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ, திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சாா்பாக சையத்பாரூக் போட்டியிடுகின்றனா். இவா்களுடன் தவெக, நாம்தமிழா் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து வந்த கிறிஸ்தவா்களிடம் ஓரே நேரத்தில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக், தவெக பேரூா் செயலாளா் தங்கமணி மற்றும் நாம் தமிழா் கட்சியினா் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

ஓரே நேரத்தில் 4 கட்சிகளை சோ்ந்தவகளும் ஓரே இடத்தில் கூடி வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத் பாரூக்கை கடந்து சென்ற போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்தினா்.

அப்போது நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ் ஆகியோரிடமும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வாழ்த்தி பேசினாா்.