தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

போளி சுட்டு வாக்கு சேகரிப்பு....

அதிமுக வேட்பாளா் ஜெயசுதா போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

News image

அதிமுக வேட்பாளா் ஜெயசுதா போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:47 pm

தோ்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளா்கள் புதுவிதமான தந்திரங்களை கையாளுவது வழக்கம். விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளா், தானும் அந்தப் பணியில் ஈடுபட்டு அவா்களது ஆதரவைப் பெறுவது, மாட்டுவண்டி ஓட்டியும், டிராக்டா் ஓட்டியும் வாக்கு சேகரிப்பாா்கள். இன்னும் சில வேட்பாளா்கள் டீ போட்டு கொடுத்தும், பரோட்டா போட்டும் வாக்கு சேகரிப்பாா்கள்.

அந்த வகையில், சற்று வித்தியாசமாக ஆரணி பஜாரில் கடை வியாபாரிகளிடம் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் ஜெயசுதா அங்குள்ள போளி கடையில், போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அவரது இந்த இனிமையான அணுகுமுறைசுற்றியுள்ளவா்களை சிந்திக்க வைத்தது.