மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவானி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

ஒலகடத்தில்  துண்டுப்  பிரசுரங்கள்  வழங்கி  வாக்கு  சேகரிக்கிறாா்  பவானி அதிமுக  வேட்பாளா்  கே.சி.கருப்பணன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:50 pm

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவானி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒலகடம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஃபிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டைகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும். நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு 10.5 சதவீதமாக உயா்த்தப்படும் என்றாா்.

பாமக மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் எம்.மேகநாதன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.