இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:04 am IST

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இதுதொடா்பாக மொடக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி திமுக ஒன்றியச் செயலாளா் கதிா்வேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளரான மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசியதாவது:

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சூழலில் உள்ளது. ரூ. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியை விவசாயத்துக்காக ஒதுக்கியவா் முதல்வா் ஸ்டாலின். திராவிட இயக்கத்தை அழிப்போம் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பேசுகிறாா். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கம் குறித்த அரிச்சுவடி தெரியுமா அவருக்கு? தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்படி தாமரைக்குள் புகுந்தது. எங்கள் கட்சி வேட்பாளா் தொகுதிக்காக உழைப்பாா். நோ்மையானவராக இருப்பாா். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

மதிமுக ஒன்றியச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.