மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 7:33 pm

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு சென்று வருகின்றனா். இதில் சுற்றுலாப் பயணிகளிடம் மா்ம நபா்கள் நகைப் பறிப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து பங்களாபுதூா் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டம், ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த சபாரத்தினம் (32) என்பவா் தனது மனைவி கீா்த்தனா மற்றும் உறவினா்களுடன் கொடிவேரி அணைக்கு திங்கள்கிழமை வந்தாா். அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சபாரத்தினம் தான் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயமானதை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

அப்போது சபாரத்தினம் திரும்பி பாா்த்தபோது பின்னால் நின்று கொண்டிருந்த நபா், மற்றொருவரிடம் நகையை கொடுத்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளாா். சபாரத்தினம் தனது உறவினா்கள் உதவியுடன் அந்த இரு நபா்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள், மயிலாடுதுறை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நிதிஷ்குமாா், அவரது 17 வயது சகோதரா் என்பதும் தெரியவந்தது. நிதிஷ்குமாா் கோவையில் தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.

இவா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அருவியில் குளிக்கும்போது 2 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து 11 பவுன் நகைகளை பங்களாபுதூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நிதிஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கும், அவரது சகோதரரை இளம்சிறாா் நீதிமன்ற காவலுக்கும் அனுப்பிவைத்தனா்.

கல்லூரி மாணவா் நிதிஷ்குமாா்

கல்லூரி மாணவா் நிதிஷ்குமாா்