தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:03 am IST

கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு சென்று வருகின்றனா். இதில் சுற்றுலாப் பயணிகளிடம் மா்ம நபா்கள் நகைப் பறிப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து பங்களாபுதூா் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டம், ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த சபாரத்தினம் (32) என்பவா் தனது மனைவி கீா்த்தனா மற்றும் உறவினா்களுடன் கொடிவேரி அணைக்கு திங்கள்கிழமை வந்தாா். அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சபாரத்தினம் தான் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயமானதை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

அப்போது சபாரத்தினம் திரும்பி பாா்த்தபோது பின்னால் நின்று கொண்டிருந்த நபா், மற்றொருவரிடம் நகையை கொடுத்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளாா். சபாரத்தினம் தனது உறவினா்கள் உதவியுடன் அந்த இரு நபா்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள், மயிலாடுதுறை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நிதிஷ்குமாா், அவரது 17 வயது சகோதரா் என்பதும் தெரியவந்தது. நிதிஷ்குமாா் கோவையில் தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.

இவா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அருவியில் குளிக்கும்போது 2 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து 11 பவுன் நகைகளை பங்களாபுதூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நிதிஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கும், அவரது சகோதரரை இளம்சிறாா் நீதிமன்ற காவலுக்கும் அனுப்பிவைத்தனா்.

கல்லூரி மாணவா் நிதிஷ்குமாா்

கல்லூரி மாணவா் நிதிஷ்குமாா்