வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

News image

நடுபட்டி பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:06 pm

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் நடுபட்டி, குண்டுமல்லநாயக்கனூா், நீலாக்கவுண்டன்பாளையம், பாச்சங்காட்டுப்பாளையம், செங்கப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 4500 வழங்கப்படும். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்றாா்.