மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்: கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் பிரசாரத்தில் தெரிவித்தாா்.

News image

கோபி அருகே செங்கோட்டையன் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:10 am IST

சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் பிரசாரத்தில் தெரிவித்தாா்.

கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் மற்றும் தொண்டா்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு திறந்த வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாதிபாளையம், உடையாம்பாளையம், கங்கம்பாளையம், வெள்ளாங்கோயில், அம்மா நகா், குளத்துப்பாளையம், சில்லாமடை, நஞ்சநாயக்கனூா், வேப்பம்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளாா். எனவே, 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்ற என்னை ஆதரியுங்கள் என்றாா்.

தோ்தல் பிரச்சாரத்தின்போது வெள்ளாங்கோவில் சந்தைக் கடை பகுதியில் என்.நல்லசிவம் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினா் சாா்பில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.