தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானி தொகுதிக்குள்பட்ட கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆலத்தூா், பெரியபுலியூா் ஊராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். மேலும், விலைவாசி உயா்வை ஈடுகட்டும் வகையில் உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். எனவே, வாக்காளா்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
ஈரோடு வடக்கு மாவட்ட பாமக செயலாளா் ஜெகதீசன், அதிமுக பவானி தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன், கவுந்தப்பாடி ஊராட்சி முன்னாள் தலைவா் பாவா தங்கமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி

பவானியில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

அரியலூா் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்

பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


