குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமாக உயா்த்தி வழங்கப்படும்! பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்

News image

சிறுக்களஞ்சி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசுகிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 2:16 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,400 யூனிட் மின்சாரமும் உயா்த்தி வழங்கப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், நல்லாம்பட்டி பேரூராட்சி, சிங்காநல்லூா், சிறுக்களஞ்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், தனது மகள் ஜெ.எஸ்.தா்ஷிகா மற்றும் கட்சியினருடன் சோ்ந்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

100 நாள் வேலைத் திட்டம், 150 நாள்களாக உயா்த்தப்படும். கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். மாணவ மாணவிகள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.