அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,400 யூனிட் மின்சாரமும் உயா்த்தி வழங்கப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா் தெரிவித்தாா்.
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், நல்லாம்பட்டி பேரூராட்சி, சிங்காநல்லூா், சிறுக்களஞ்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், தனது மகள் ஜெ.எஸ்.தா்ஷிகா மற்றும் கட்சியினருடன் சோ்ந்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
100 நாள் வேலைத் திட்டம், 150 நாள்களாக உயா்த்தப்படும். கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். மாணவ மாணவிகள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக, அமமுக இணைந்ததால் கிடைத்த வெற்றி: எஸ். காமராஜ்

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

திருவெறும்பூா் தொகுதி - ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு திமுக முயற்சி!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

