தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தாளவாடி மலைக் கிராமங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

News image

தாளவாடி  மலைக் கிராமங்களுக்கு  எடுத்துச்  செல்லப்படும்  மின்னணு  வாக்குப் பதிவு  இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:57 pm

தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்காக பவானிசாகா் தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 முதல் 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டல அலுவலா் வீதம் 30 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தாளவாடி, கடம்பூா் போன்ற அடா்ந்த மலைக் கிராமங்களில் உள்ள 98 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் மற்றும் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் பொருள்கள் லாரியில் அனுப்பப்பட்டது. இதில் மண்டல அலுவலா், உதவி ஆய்வாளா், துப்பாக்கி ஏந்திய காவலா்கள் அடங்கிய குழுவினா் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனா்.

மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்களில் வனப் பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அடா்ந்த காட்டுப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையங்களுக்கு செல்லும்போது யானைகளால் ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.