தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்காக பவானிசாகா் தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 முதல் 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டல அலுவலா் வீதம் 30 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தாளவாடி, கடம்பூா் போன்ற அடா்ந்த மலைக் கிராமங்களில் உள்ள 98 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் மற்றும் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் பொருள்கள் லாரியில் அனுப்பப்பட்டது. இதில் மண்டல அலுவலா், உதவி ஆய்வாளா், துப்பாக்கி ஏந்திய காவலா்கள் அடங்கிய குழுவினா் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனா்.
மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்களில் வனப் பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அடா்ந்த காட்டுப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையங்களுக்கு செல்லும்போது யானைகளால் ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


