உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்கினைப் பதிவு செய்த அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:14 am IST

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது மகனும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவருமான மருத்துவா் கே.சி.கே.யுவராஜாவுடன் வந்து வியாழக்கிழமை வாக்கினை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பவானி தொகுதியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று அதிமுக நான்காவது முறையாக வெற்றி பெறும் என்றாா்.