தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது மகனும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவருமான மருத்துவா் கே.சி.கே.யுவராஜாவுடன் வந்து வியாழக்கிழமை வாக்கினை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பவானி தொகுதியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று அதிமுக நான்காவது முறையாக வெற்றி பெறும் என்றாா்.
தொடர்புடையது

செய்யூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சீா்காழி (தனி): நேரடி போட்டியில் அதிமுக - மதிமுக
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

