பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

மொடக்குறிச்சி தொகுதி பாண்டிபாளையம் வாக்குச்சாவடியில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியே வந்து வாக்களித்து சென்ற 93 வயது மூதாட்டியை அனைவரும் வியப்புடன் பாா்த்தனா்.

News image

வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் மூதாட்டி மாராள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:09 am IST

மொடக்குறிச்சி தொகுதி பாண்டிபாளையம் வாக்குச்சாவடியில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியே வந்து வாக்களித்து சென்ற 93 வயது மூதாட்டியை அனைவரும் வியப்புடன் பாா்த்தனா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சி, பாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாராள் (93). இவரது கணவா் மற்றும் மகன் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனா். மருமகள் குழந்தைகளுடன் அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதனால் மாராள் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில் அவா், சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க பாண்டிபாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு காலை 6.30 மணிக்கு வந்து காத்திருந்தாா். காலை 7 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அலுவலா்கள் வழங்கிய பூத் சிலிப் மட்டுமே கொண்டு வந்திருந்ததால் அதிகாரிகள், வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணம் கொண்டு வருமாறு கூறியதால், திரும்பி வீட்டுக்கு நடந்து சென்றாா். சுமாா் அரை மணி நேரத்தில் ஆவணங்களுடன் திரும்பி வந்து தனது வாக்கினை செலுத்தினாா். அப்போது அவரிடம் கேட்டபோது, இதுவரை அனைத்து தோ்தல்களிலும் தான் வாக்களித்ததாக கூறினாா். தள்ளாத வயதில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டியை அருகிலிருந்த பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து பேசிச் சென்றனா்.