தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

News image

சத்தியமங்கலம்  அரசு  ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு  செலுத்த   காத்திருந்த  பொதுமக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:10 am IST

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

பவானிசாகா் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளா்கள் காலை முதலே வாக்குச் சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளா்கள் வருகை அதிகரித்திருந்தது.

பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ. பண்ணாரி தனது வாக்கை பதிவு செய்தாா். பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் வாக்களித்தாா். வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளா்கள் கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.